Sunday, September 4, 2016

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய 'நந்திக்கடலுக்கான வழி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள!

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள புநந்திக்கடலுக்கான வழிபூ நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி- கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில்  புலிகளின் தலைவர்  பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2009 ஆம் ஆண்டு கமல் குணரட்ன கடமையாற்றினார்.

No comments:

Post a Comment