Thursday, June 29, 2017

டிரம்ப்-மோடி சந்திப்பின் போது,மெலனியா’வின் ஆடையின் விலை 139 180 இது தானுங்க!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் முறையாக வெள்ளை மாளிகை சென்ற மோடியை, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா வரவேற்றனர்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நேற்று(27) அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை சென்றார். அங்கு மோடிக்கு சிவப்பு கம்பளத்துடன், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிரம்ப் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்து மோடியை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி முன்னிலையில் இருநாட்டு குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கேமிராவின் கவனத்தை டிரம்ப்பின் மனைவி மெலானியா பெற்றுக் கொண்டார்.

அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்த மஞ்சள் நிற மலர் உடையின் விலை 1,39 180 ரூபாயாகும். இதனை பிரபல ஆடை வடிவமைபாளர் எமிலியோ பூசி வடிவமைத்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின் போது, இந்தியாவுக்கு டிரம்ப் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்ற டிரம்ப், மகள் இவான்காதான் இந்தியா செல்ல மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறினார்.
Image result for melania trump dress modi visit
Related image
Image result for melania trump dress modi visit
Image result for melania trump
Image result for melania trump
Image result for melania trump

Friday, June 2, 2017

மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் குண்டுப்புரளி – இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
விமானம் அவுஸ்திரேலியாவிலிருந்து பறந்த சிறிது நேரத்தில் வெடிகுண்டு பீதி காரணமாக மெல்போர்னில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 
விமானத்தில் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட இலங்கை பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.
 
சோதனையில் அந்த பயணியிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை. மாறாக ஒரு பவர்பாங்க் மட்டும் இருந்திருக்கிறது. அந்த பயணி குடிபோதையில் விமான சேவகர்களிடம் தகராறு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.