Wednesday, May 3, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மே தின பேரணியில் இரண்டு மில்லியன் மக்கள்!

 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி மேதின கூட்டத்தினை நடத்தி முடிந்திருந்தது.
 
இந்நிலையில் காலிமுகத்திடலில் நேற்று நடத்தப்பட்ட மேதினக் கூட்டத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலி கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் அரசாங்கத்திற்கு முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment