Friday, May 12, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்‌ஷ மோடியுடன் சந்திப்பு!

 இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லை என்ற போதிலும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதற்கிணங்க சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து கூறியுள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற இராப்போசன விருந்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இந்திய பிரதமர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பிரீஸும் கலந்து கொண்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பு மிகவும் ந
ட்பு ரீதியாக காணப்பட்டதாக இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சாந்து கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் தற்போதும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உதவிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment