Friday, May 12, 2017

சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட அரசு நிராகரிப்பு!

சீனாவினது நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தும் இலங்கை அரசு அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இலங்கை வருகை தந்துள்ள இந்நிலையில் அடுத்த வாரம் தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது.
 
இது குறித்து பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சீனா எங்களிடம் அனுமதி கேட்டது. ஆனால் நாங்கள் அதனை மறுத்துவிட்டோம். இது ஒரு சிக்கலான விவகாரம்” என தெரிவித்தார்.
 
கடந்த 2014-ம் ஆண்டு இதே போல் சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதி கேட்டது. அப்போதைய ராஜபக்ஷ அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது.
 
தற்போது பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் கோரிக்கையை இலங்கை நிராகரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment