Saturday, May 13, 2017

14வது சர்வதேச வெசாக் வைபவம்!

ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14வது சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12) காலை ஆரம்பமாகியது.
இந்த வெசாக் தின வைபவத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் 80 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 1000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
 
பௌத்த போதனைகளின் அடிப்படையில் சமூக நீதியின் மூலம் உலக சமாதானத்தை நிலை நாட்டுதல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச வெசாக் தின நிகழ்வில் ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.
 
இதேவேளை இந்த நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment