Tuesday, March 21, 2017

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
 
படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.
 
படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். டில்லியில் இன்று தமிழக மீனவர்கள், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை சந்திக்க உள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் செயல் மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment