Saturday, January 28, 2017

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன்: விக்ரமபாகு கருணாரட்ன!

 புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து அந்த போரை நிறுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன் எனவும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்
ன தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த வரலாற்று வீரன் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் மகாவம்சத்தில் எழுதப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே விக்ரமபாகு கருணராட்ன இதனை கூறியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment