Friday, January 27, 2017

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தில் பிளவு : தினேஸ் குணவர்தன!

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போ
தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த அணியால் இன்று நுகேகொடையில் நடத்தப்படவுள்ள கூட்டம் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கபட்டுள்ளது.
 
இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment