Saturday, December 3, 2016

ஜனாதிபதியின் அழைப்பில் உத்தியோகபூர்வ தன்மை இல்லை: தினேஸ் குணவர்த்தன!

 தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான வட்ட மேசை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்துள்ளதன் உத்தியோகப்பூர்வ தன்மை தொடர்பில் சந்தேகம் உள்ளது என கூட்டு எதிர்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்பிரச்சினைக்கு வருமாறு அழைத்துள்ளதாக கூறுகின்றீர்கள். அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு எமக்கு கிடைக்வில்லை. அழைத்துள்ளார் என்றால் நாங்கள் எங்கே செல்வது. கொழும்பிற்கா? அதிகாரத்தில் நாங்கள் இல்லை . பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே உள்ளனர்.
 
 அதே போன்று அரசியலமைப்பு சபை ஒன்றுள்ளது. ஆனால் எவ்விதமான தெளிவற்றதும் உத்தியோகப்பூர்வமற்றதுமான அறிவிப்புகள் மற்றும் அழைப்புகளை மையப்படுத்தி எம்மால் செயற்படவோ பதிலளிக்கவோ முடியாது. பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பதாயின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிகழச்சி நிரல் காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment