Saturday, November 26, 2016

புலிகளை நினைவு கூர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் பாதுகாப்பு அமைச்சு!

மாவீரர் தினத்தில்  புலிகளை நினைவு கூர்ந்து, நீண்டகால போரின் பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போரின் போ
 
து உயிரிழந்தவர்களை நினைவு கூரலாமே தவிர  புலிகளுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
மேலும், நீண்ட கால போரின் பின்னர் தற்போது நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் புலிகளை நினைவுகூர்ந்து நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment