Wednesday, November 16, 2016

இரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின் தொலைபேசியில் பேச்சு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், முதன்முறையாக, நேற்று தொலைபேசியில் பேசினர்; அப்போது, இரு நாட்டு உறவுகளை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ, இருவரும் சம்மதித்தனர்.
 
சமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றார். அடுத்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக, அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், நேற்று தொலைபேசியில் முதன்முறையாக பேசினர். டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த புடின்,
 
 முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதித்தார். டிரம்ப் பேசுகையில், ''அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நட்புறவு மீண்டும் மலர வேண்டும்; ரஷ்ய மக்களுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும்,'' என்றார். இரு தலைவர்களும், இரு நாடுகள் இடையே நட்புறவை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ சம்மதித்தனர்.

No comments:

Post a Comment