Sunday, October 23, 2016

தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது: குமார வெல்கம!

Image result for kumara welgama
தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையல் அமைக்கப்படும் கூட்டணிக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
புளத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குமார வெல்க, மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அண்மையில் தனது தோட்டத்தில் இரண்டு டிப்பெண்டர் வண்டிகளை தேடி சோதனை நடத்திய சம்பவம் தொடர்பாகவும் வெல்கம கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment