Monday, October 17, 2016

சீன விஞ்ஞானிகள் இருவருடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‛ஷெங்ஸோ-11!

சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11' என்ற ராக்கெட்டை இன்று(அக்., 17) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள
 
சீனா, கடந்த 2013ம் ஆண்டு மூன்று சீன விஞ்ஞானிகளுடன் 'டியாங்காங்-1' என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக அவர்கள் பூமிக்கு திரும்பினர்.
 
இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங் மற்றும் ஜின் ஹயெ்பெங்க் என்ற இரு விஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ-11' ராக்கெட் இன்று வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் சுமார் ஒருமாத காலம் தங்கியிருக்கும் இரு விஞ்ஞானிகளும், அங்கு ஆய்வுப்
பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

No comments:

Post a Comment