Saturday, September 3, 2016

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தாக்குவது, விரட்டியடிப்பது, சிறை பிடித்துச்செல்வது, மீன்பிடி கருவிகளைப் பறித்துக்கொண்டு வலைகளை வெட்டி வீசுவது என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.
 
இந்நிலையில், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 113 படகுகளையும்  உடனடியாக விடுவிக்கவும், கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
 
அதன் முதல்கட்டமாக இன்று மீன்பிடிதுறைமுகம் அருகே கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment