Saturday, September 3, 2016

குருணாகலில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை!

குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
 
இதேபோன்று, மஹிந்த குழு சார்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதில்லையென ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment