Wednesday, April 30, 2014

சென்னையை குண்டு வைத்து தகர்க்க சதி:பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டு இலங்கை தீவிரவாதி கைது சேட்டிலைட் போன், வரைபடங்கள் பறிமுதல்!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Wednesday, April 30, 2014
சென்னை::பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியாக செயல்பட்ட தீவிரவாதி, சென்னையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் விசாரித்ததில் சென்னையை குண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்தது. அவனிடம் இருந்து சேட்டிலைட் போன், இந்திய வரைபடம், அமெரிக்க டாலர், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து ஓட்டல் ஒன்றில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 24ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதையொட்டி, தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், உளவு பிரிவு, கியூ பிரிவு, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டு ஒருவன் பதுங்கி இருப்பதாகவும், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு பல இடங்களில் தேடி வந்தனர். சென்னை மண்ணடியில் நேற்று நள்ளிரவில் போலீசார் சாதாரண உடையில் சென்று சோதனையிட்ட போது, அந்த ஐஎஸ்ஐ உளவாளியை சுற்றி வளைத்தனர். எனினும், அவர்கள் வருவதை கண்டுபிடித்து விட்ட வாலிபர் ஆட்டோவில் ஏறி தலைமறைவானார்.

இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்ட போது, அந்த வாலிபர் சிக்கினார். அவரை போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்டவன் பெயர் முகமது ஜாகீர் உஷேன் (37). இலங்கை தமிழரான இவன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. இவர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பல முறை வந்து சென்றுள்ளான். இந்தியாவில் நேரடியாக நுழைய முடியாத தீவிரவாதிகள், இலங்கையில் ஏஜென்டுகளை அமர்த்திக் கொண்டு அங்கிருந்து இங்கு உளவு பார்த்துள்ளனர். இவர்கள் முகமது ஜாகீர் உஷேனையும் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டத்தை அரங்கேற்ற பயன்படுத்திஉள்ளனர்.இவன் சர்வதேச போலீசாரால் தேடப்படும் குற்றவாளி.

 இவன் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு சேட்டிலைட் போனையும், இந்தியாவின் வரைபடங்கள், அமெரிக்க டாலர்கள், கள்ள நோட்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இவனிடம் போலீசார் விசாரித்ததில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குண்டு வைத்து தகர்க்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அரசுக்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்தது, கூட்டு சதியில் ஈடுபட்டது என்னும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எஜென்டு ஒருவன் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆள் சேர்க்க திட்டம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பிற்கு தமிழகத்தில் இருந்து ஆள் சேர்ப்பதற்காக ஜாகீர் உஷேன் முயற்சித்ததாகவும் பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளன. மேலும், இவன் பாகிஸ்தானின் உளவு படையான ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல்கள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளான். கடந்த 2 வாரத்திற்கு முன்புதான், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளான். இவனை பற்றிய அனைத்து தகவல்களையும் மத்திய உளவு அமைப்பு தமிழக போலீசாருக்கு தெரிவித்தது.ஜாகீர் உஷேனை கைது செய்தபோது, பாகிஸ்தான் அதிகாரி போல நடந்து கொண்டான். அவனிடம் வெடிகுண்டு சம்பந்தப்பட்ட சில தகவல்களும் கிடைத்துள்ளன. இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இவனிடம் போலீசார் பறிமுதல் செய்த செல்போன் மற்றும் டைரியில் பல தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன என்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டிருந்ததா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

விக்னேஸ்வரன் மீது அதிருப்தி கூட்டமைப்புக் கூட்டத்தில் தெரிவிப்பு:!

Wednesday, April 30, 2014
இலங்கை::வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள், நிர்வாகப் போக்குகள், அவரைச் சூழ இருப்போரின் செயற்பாடுகள் போன்றவை குறித்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து, காரசாரமாகக் கருத்து வெளியிட்டனர் எனத் தெரியவருகின்றது.
 
முதல்வரைச் சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ கூட முடியாமல் இருக்கின்றது என சில மூத்த தலைவர்கள் விசனத்துடன் குறிப்பிட்டனர். பொதுவாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்புணர்வு அந்தக் கூட்டத்தில் ஆரவாரமின்றி - ஆனால் தீவிரமாக - வெளிப்படுத்தப்பட்டதாகக் கூட்டத்தில் பங்குபற்றிய சில தலைவர்கள் தெரிவித்தனர். பட்டவர்த்தனமாக சில விடயங்கள் அடுக்கிப் பேசப்பட்டன என்றும் கூறப்பட்டது.
 
எனினும், கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அந்தப் பிரச்சினைக்கு அந்த மட்டத்தில் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார் என்றும் தெரியவந்தது. தவறுகள், அதிருப்திகள், புரிந்துணர்வின்மை, இருந்தால் அவற்றை நாம் முதலமைச்சருக்கு எடுத்துரைத்து நிலைமையைச் சீர்செய்து கொள்ளலாம். அதற்குத்தானே நாங்கள் எல்லோரும் இருக்கின்றோமே..

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் திருகோணமலையில் சந்தித்துப் பேச்சு!

Wednesday, April 30, 2014
இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்தார்.
 
இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பற்றி இரு முதலமைச்சர்களும் சினேகபூர்வமாக கலந்துரையாடினார்கள்.
 
  முக்கியமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த அரச ஊழியர்கள் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரச ஊழியர்கள் வடமாகாணத்திற்கும் வடமாகாணத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள் கிழக்கு மாகாணத்திலும் கடமையாற்றி வருகின்றனர்.
 
இவர்களை அவர்களின் சொந்த மாகாணத்திற்கு விடுவிப்பு செய்வது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு யுத்தம் காரணமாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது செந்த இடங்களில் குடியமர்த்துவதோடு அவர்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வடமாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
கடந்த 2006ஆம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து தற்போது மூதூர், பட்டித்திடல், மணற்சேணை ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை தான் மாகாண மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் அவர்களது செந்த இடங்களுக்கு விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கனவு காண்­கின்­றது; ஆனால், அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு இலங்­கையில் ஒரு­போதும் இட­மில்லை: குண­தாச அம­ர­சே­கர!

Wednesday, April 30, 2014
இலங்கை::சர்­வ­தே­சத்தின் அனு­ச­ர­ணையை பெற்று இலங்­கைக்குள் பிரி­வி­னை­யை ஏற்­ப­டுத்­தலாம் என தமிழ் கூட்­ட­மைப்பு கனவு காண்­கின்­றது. ஆனால், அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு இலங்­கையில் ஒரு­போதும் இட­மில்லை என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.
 
வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது மீண்டும்  ­பு­லி­களை உரு­வாக்­கு­வ­தற்கு சம­னாகும். பாது­காப்பு விட­யத்தில் அர­சாங்கம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.
 
இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு புதிய அர­சியல் யாப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற வட மாகாண சபை தீர்­மானம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்.
 
அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது மீண்­டு­மொரு பிரி­வினைவாதப் போராட்­ட­மே­யாகும்.இலங்­கையின் இனப்­பிரச்­சி­னையை தூண்­டு­வது சிங்­களத் தரப்­பினர் அல்ல தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மட்­டு­மே­யாகும். இன்று அவர்கள் தீர்­வுக்­காக குரல் கொடுப்­பதைப் பார்த்து தமிழ் மக்கள் ஏமாந்து வாக்­க­ளிக்­கின்­றனர்.
 
உண்­மை­யா­கவே வடக்கு, கிழக்கை இணைத்து சமஷ்டி அர­சியல் யாப்­பொன்று கொண்டு வரப்­ப­டு­மாயின் இறு­தியில் மீண்­டு­மொரு இனப்­பி­ரச்­சி­னைக்கு தூண்­டு­கோ­லாக அமையும். இனப்­பி­ரச்­சி­னை­யினை மீண்டும் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­பினர் சர்­வ­தேச சக்­தி­களை ஒன்­றி­ணைத்து முடி­வு­களை மேற்­கொள்­கின்­றனர்.
 
கூட்­ட­மைப்­பி­ன­ரதும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரி­னதும் பகற் கனவு ஒரு­போதும் பலிக்கப் போவ­தில்லை. இவர்­களின் எண்­ணத்தை நிறை­வேற்ற நாம் இட­ம­ளிக்­கப்­ போ­வ­து­மில்லை.
 
அதேபோல் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்னேஸ்­வரன் பதவி ஆசையில் புலம்பிக் கொண்­டி­ருக்­கின்றார். முத­ல­மைச்­ச­ருக்­கான அதி­கா­ரங்கள் போத­வில்­லை­யென்றால் அவர் பதவி விலக வேண்டும். மேலும், வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றி மீண்டும் வடக்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பாட்டை அர­சாங்கம் செய்­யக்­கூ­டாது.
 
ஆரம்­பத்தில் தவ­றி­ழைத்­த­மையின் கார­ணத்­தி­னா­லேயே விடு­த­லைப்­பு­லிகள் தீவி­ர­வாதம் உரு­வாக்­கப்­பட்டு பெரி­ய­தொரு போர் ஆரம்­ப­மா­கி­யது. ற்­போது புனர்­வாழ்வு பெற்­றுள்ள ­புலி இயக்க உறுப்­பி­னர்­களை கண்­கா­ணிக்­காது வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­றினால் முன்­னதை விடவும் மோச­மான வகையில் தமிழ் தீவி­ர­வாதம் உரு­வாக்­கப்­படும்.
 
நாட்­டி­னதும் பொது மக்­க­ளி­னதும் பாது­காப்பு அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது. மீண்டும் வடக்கில் ஆயுத போராட்டங்களையும் அப்பாவி பொது மக்கள் இறப்பதையும் அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
 
அதேபோல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை மீண்டும் குழப்பும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் புலி உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை!

Wednesday, April 30, 2014
இலங்கை::
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் புலி உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட  புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
 
அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள குறித்த நாடுகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட உள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் கனடாவில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது!

Wednesday, April 30, 2014
இலங்கை::ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு

ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் மொஹமட் பைசால் ராசீன் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுடன் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை சார் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ராசீன் தெரிவித்துள்ளார்.

ஏனைய மத்திய கிழக்கு நாடுகளை விடவும் ஈரான் வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்டது எனவும், வித்தியாசமான மக்கள் சமூகத்தைக் கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் திறந்த மனதுடன் செயற்படுவதில்லை என்ற போதிலும், ஈரானிய மக்கள் திறந்த மனதுடன் செயற்படக்கூடியவர்கள் என தெரிவித்துள்ளார்.

பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம்!

Wednesday, April 30, 2014
இலங்கை::பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

பாப்பாண்டவர் எதிர்வரும் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கை கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் அறிவித்துள்ளது.எனினும், திகதிகள் இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.இலங்கை விஜயத்தின் போது பாப்பாண்டவர் எங்கு விஜயம் செய்வார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மடு தேவாலயத்திற்கும், இடம்பெயர் மக்களை பார்வையிடவும் விஜயம் செய்வார் என்ற தகவல்களில் உண்மையில்லை என கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளையின், இலங்கையின் சகல கத்தோலிக்க பேராயர்களும் விரைவில் வத்திக்கான் சென்று, பாப்பாண்டவரை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இவ்வாறு பேராயர்கள், பப்பாண்டவரை சந்திப்பது மரபு என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சீக்கிய கலவர வழக்கில் கோர்ட் உத்தரவு!

Wednesday, April 30, 2014
புதுடில்லி: சீக்கிய கலவர வழக்கில், காங்கிரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அமெரிக்க கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த 1984ல், பிரதமராக இருந்த இந்திரா, தன் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த கலவரத்தை, காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தூண்டி விட்டதாக, குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, டில்லி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களுக்கான அமைப்பு சார்பில், அங்குள்ள கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, காங்., கட்சி தலைவர்கள் தான் தூண்டி விட்டனர். இந்த கலவரத்தில் தொடர்புடையவர்களுக்கு, காங்., தலைவர் சோனியா, பதவி கொடுத்து பாதுகாக்கிறார். இது, மனித உரிமை மீறல் பிரச்னை. எனவே, இதுகுறித்து விசாரித்து, கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், காங்., தலைவர் சோனியாவுக்கு, ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி ராபர்ட் ஸ்வீட் தலைமையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், அமெரிக்காவில் நடக்கவில்லை. வேறொரு நாட்டில் நடந்த கலவரத்தை விசாரிப்பதற்கு, அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை' என கூறி, காங்கிரசுக்கு எதிரான வழக்கை, தள்ளுபடி செய்தார்.        

அடோல்ப் ஹிட்லர்: ஹிட்லரும் அவரது மனைவியும் மரணித்த ஏப்ரல் 30, 1945, உலக வரலாற்றில் பதியப்பட்ட நாள்!!

Wednesday, April 30, 2014
சென்னை::ஏப்ரல் 30, 1945.  உலக சர்வாதிகாரியாக பேசப்பட்ட அடோல்ப் ஹிட்லர் மரணிக்கிறார். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பல திருப்பங்கள் ஹிட்லரின் மரணத்தின் பின்னர் ஏற்படுகிறது.
 
 ஒஸ்ரியாவில் (Austria)  20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
 
ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சென்னை பங்குச் சந்தையை மூட செபி முடிவு!!

Wednesday, April 30, 2014
சென்னை::தென்னிந்தியாவின் பங்கு வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தலைமையகமாக விளங்கும் சென்னை பங்குச் சந்தை 76 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. ஆனால் வரும் மே மாதம் 30ஆம் தேதியுடன் இந்த மையத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்படலாம் என்ற செபியின் எச்சரிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
 
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி குறிப்பிட்டபடி நிகர மதிப்பு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு தேவைகளை சென்னை பங்குச் சந்தை நிறைவேற்றத் தவறியதால் இந்த முடிவு ஏற்படக்கூடும் என்று தெரிகின்றது. இன்னும் சில வாரங்களுக்குள் சென்னை பங்குச் சந்தை நிர்வாக அமைப்பில் ஏதேனும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய செபியின் முடிவை மாற்றமுடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதமே செபி அமைப்பு, சென்னை பங்குச் சந்தை இந்த ஆண்டு மே இறுதிக்குள் ஆண்டு வர்த்தகமாக 1000 கோடி ரூபாயையும், நிகர மதிப்பாக 100 கோடி ரூபாயையும் கணக்கில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இல்லையெனில் வர்த்தகத்தை தொடருவதென்பது முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. செபி குறிப்பிட்ட இரண்டு நிலையையுமே சென்னை பங்குச் சந்தை இன்னும் எட்டவில்லை. மேலும் இதற்கான காலக்கெடு முடிவடைய வெறும் 30 நாட்களே இருக்கின்ற நிலையில் வர்த்தகம் நிறுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
சென்னை மையத்தின் இந்த நிலை குறித்த ஒரு முக்கியக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மே மாத இறுதியில் பங்குதாரர்களுக்கான சிறப்பு பொதுக் கூட்டத்தைக் கூட்டி பங்குச் சந்தையின் புதிய தேவைகளும், பிராந்திய மையத்தால் நிறைவேற்ற இயலாத குறியீடுகளாக அதிகாரிகள் கருதுவதுமான முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் போன்றவை குறித்து விவாதித்து தன்னார்வ பணிநிறுத்தத்தைத் தொடங்கக்கூடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
 
பொதுக் குழு கூட்டம் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட நிர்வாக இயக்குனர் ராமநாத எம்.கோட்டகல் இதுகுறித்த நடவடிக்கைகளை விளக்க சில நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். மற்ற பிராந்திய மையங்களுடன் இணைந்து செயல்படவும் சென்னை பங்குச் சந்தை முயற்சித்தது. இருப்பினும், இந்த நடவடிக்கை பலனளிக்கவில்லை என்று பங்குச் சந்தையின் மற்றொரு இயக்குனர் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரசன்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்றார்!

Wednesday, April 30, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டரை வருட காலமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் பி.எல் அஜித் பிரசன்ன
 
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்று முதல் தடவையாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருவதை வரவேற்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவின் புதிய காரியாலத்தில் 28-04-2014  திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
 
காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி. துஸார திலங்க ஜெயல தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த லொகுகே கலந்து கொண்டார்.
 
இதன் போது பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல் அஜித் பிரசன்ன பிரதான பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த லொகுகேவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி பொலிஸ் நிலைய பிரிவு பொறுப்பதிகாரிகள் உட்பட ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மலேசிய முதலீட்டாளர்களை வட கிழக்கில் முதலிடுமாறு: ரவூப் ஹக்கீம் கோரிக்கை!

Wednesday, April 30, 2014
இலங்கை::தற்பொழுது மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு (அம்னோ) செயலாளர் நாயகமும், சமஷ்டி எல்லைப்புற அமைச்சருமான தெங்கு அத்னான் மன்சூரை கோலாலம்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 
அமைச்சர்கள் இருவரும் தத்தமது நாடுகளின் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தனர். மலேசிய அமைச்சர் மன்சூர் கருத்துத் தெரிவிக்கும் போது, கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் பற்றிக் குறிப்பிட்டதோடு, அந்தத் தேர்தல் முடிவுகள் அரசின் பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவையென்பதை உணர்த்தின என்றும் கூறினார்.
 
அத்துடன் கடுமையான சட்டங்கள் பல நீக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் அரசியலில் பெரும் உந்து சக்தியாகவுள்ள இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
தீவிரவாதத்திற்கும் சமய கருத்துக்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் நிகழா வண்ணம் சம நிலையைப் பேணுவதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
 
மூன்று தசாப்த காலம் நீடித்த இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னணியில், வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அங்கு முதலீடுகளை மேற்கொள்ள அமைச்சர் ஹக்கீம் மலேசிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் அந் நாட்டு அமைச்சரிடம் வேண்டுகோளொன்றை விடுத்தார்.
 
அத்துடன், இரு நாடுகளும் பயன்பெறக் கூடிய விதத்தில் இளைஞர் யுவதிகளுக்கான பரிமாற்ற செயல்திட்டமொன்றின் சாத்தியக்கூறுகள் பற்றிப் பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
 
தற்பொழுது கணினி தொழில்நுட்பத்தில்  பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 25 பேருக்கு பயிற்சி அளித்துவரும் நிறுவனங்களுக்கும் அரசியல் அமைப்புக்களுக்கும் அம்னோ அமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக மலேசிய அமைச்சர் கூறினார்.
 
இரு நாடுகளுக்கும் இடையில் ஆட்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் அமைச்சர்கள் இருவருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
 
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் – ஊடகச் செயலாளர்

புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள்: தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்­புமே எதி­ராக செயற்­ப­டு­கின்­றார்கள்: சம்­பிக ரண­வக்க!

Wednesday, April 30, 2014
இலங்கை::புலி­களால் வன்­னி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் அவர்­க­ளது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். அது முஸ்­லிம்­களின் உரி­மை­யாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்­புமே இதற்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றார்கள் எனக் குற்­றஞ்­சாட்டும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக ரண­வக்க வன்­னியில் இந்­தியப் பிர­ஜைகள் ஒரு இலட்சம் பேர் பலாத்­கா­ர­மாக குடி­யேற்­றப்­பட்­டது போல் இன்றும் சட்­ட­வி­ரோ­த­மாக இங்கு வந்து தங்­கி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­களை குடி­யேற்­று­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களை பாது­காப்பு படை­யினர் தடுத்து நிறுத்த வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
இன்றும் சட்­ட­வி­ரோ­த­மாக இங்கு வந்து தங்­கி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­களை குடி­யேற்­று­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களை பாது­காப்பு படை­யினர் தடுத்து நிறுத்த வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­மை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக ரண­வக இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் வடக்­கி­லி­ருந்து புலிப் பயங்­க­ர­வா­தி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­பட வேண்­டி­ய­தோடு புத்­த­ளத்தில் 1981 க்கு முன்னர் காணப்­பட்­டதைப் போன்று குடிப் பரம்­பலை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இதுவே எமது கொள்­கை­யாகும். அத்­தோடு வில்­பத்து தேசிய வனாந்­த­ர­மென்­பது பாது­காக்­கப்­பட வேண்­டிய சொத்­தாகும். எனவே, இதனை அழித்து மக்­களை மீள் குடி­யேற்­று­வ­தையும் குடி­ம­னை­களை அமைப்­ப­தையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யாகும்.

அது மட்­டு­மன்றி தற்­போது வில்­பத்து வடக்கு மேற்கு பிர­தே­சங்­களில் சர­ணா­லயப் பகு­தி­களில் 43 குடும்­பங்கள் குடி­சைகள் அமைத்து வாழ்­கின்­றன. இது சட்ட விரோ­த­மான நட­வ­டிக்­கை­யாகும். வன­வள இலாகா மற்றும் மத்­திய சூழல் பாது­காப்பு அதி­கார சபையின் அனு­ம­தி­யின்றி வனங்­களை அழிக்க முடி­யாது. மக்கள் குடி­யே­றவும் முடி­யாது.

பயங்­க­ர­வா­தி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­க­ளையும் யுத்­தத்தால் இடம்­பெ­யர்ந்த சிங்­க­ள­வர்­க­ளையும் மீள வடக்கில் குடி­யேற்ற விடாது தடுப்­ப­வர்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்பும் விக்­னேஸ்­வ­னு­மே­யாவர். எனவே, வில்­பத்து பிரச்­சினை தொடர்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­வ­ரென்ற கார­ணத்தால் அமைச்சர் ரிஷாத் பதி­யூதின் மீது விமர்­ச­னங்­களை முன் வைப்­பது பொருந்­தாத விட­ய­மாகும்.

அன்று  புலிப் பயங்­க­ர­வா­திகள் பலத்­துடன் இருந்த போது முஸ்லிம் மக்­களை காட்­டிக்­கொ­டுத்து பிர­பா­க­ர­னோடு உடன்­ப­டிக்கை செய்­தவர் தான் ஹக்கீம். எனவே முஸ்­லிம்­களை பற்றி பேசு­வ­தற்கு அவ­ருக்கு அதி­காரம் இல்லை.

1977 - 1981 ஆம் ஆண்­டு­களில் இலங்­கை­யி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­ப­ட­வி­ருந்த இந்­தியப் பிர­ஜைகள் வன்­னியில் குடி­யேற்­றப்­பட்­டனர். இன்றும் அதே போன்ற பிரச்­சினை தலை­தூக்­கி­யுள்­ளது. சுற்­றுலா விசாவில் இங்கு வரும் இந்­தி­யர்கள் பாகிஸ்­தா­னி­யர்கள் மாலை­தீவு நாட்­ட­வர்­களை நிரந்­த­ர­மாக குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் சூட்­சு­ம­மாக நடை­பெற்று வரு­கின்­றது. இது தொடர்­பாக பாது­காப்பு படை­யினர் விழிப்­பாக இருக்க வேண்டும்.
வெளி­நா­டுகள்

இந்­தியா பாகிஸ்தான் சவூதி டுபாய் என வெளி­நா­டு­களின் உத­வி­யுடன் வடக்கில் நிர்­மா­ணிக்­கப்­படும் வீடு­களை ஒரு குறிப்­பிட்ட இனத்­துக்கோ அல்­லது தமக்கு வேண்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கோ வழங்­கப்­ப­டு­வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் சிங்­கள தமிழ் முஸ்லிம் இனங்­களின் இன விகி­தா­சா­ரத்­திற்­க­மைய குடி­யேற்­றப்­பட வேண்டும். அத்­தோடு வடக்­கி­லி­ருந்து வந்து புத்­த­ளத்தில் வாழும் முஸ்­லிம்­களால் அங்கு 1980 இல் காணப்­பட்ட குடிப்­ப­ரம்­பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மன்னாருக்கு ஒரு சட்டம் கொழும்புக்கு ஒரு சட்டம் அமுலில் இருக்க முடியாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கை பூராவும் ஒரு சட்டம் தான் அமுலில் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் - அக்டோபரில் 2 வழிப் போக்குவரத்து தொடக்கம்!

Wednesday, April 30, 2014
சென்னை::சென்னை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரையும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையிலும் 21 கி.மீ. மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. தற்போது 2 ஆவது வழித்தடத்திலும் கடந்த வாரம் முதல் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறும்போது சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட பாதையில் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 6 கி.மீ. தூரத்துக்கு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் ஒரு சில மாதங்களில் முடிவடையும். இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அசோக்நகரில் இருந்து ஆலந்தூர் இடையே கூடுதலாக 4 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதே நேரம் ஷெனாய்நகரில் இருந்து அண்ணாநகர் டவர் வரை சுரங்க ரயில்

நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்த தும் ஷெனாய்நகர் ஜ கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் அடுத்து ஆண்டு மத்தியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கிழக்கு முஸ்லிம் தலைவர்களுடன் பாதுகாப்பு தலமையக அதிகாரிகள் நல்லிணக்க பேச்சுவார்த்தை!

Wednesday, April 30, 2014
இலங்கை::கிழக்கு பாதுகாப்பு தலமையகத்தில் சிங்கள ஹிந்து புது வருட கொண்டாட்டங்களின் பின்னர் கிழக்கு வாழ் மக்களுக்கும் இராணுவத்திற்குமிடையிலான நல்லுறவினை மேம்படுத்தும் நோக்குடன் உலமா சபை தலைவர்களுக்கும் பாதுகாப்பு தலமையக அதிகாரிகளுக்குமிடையில் வெலிகந்த பாதுகாப்பு தலைமையகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி பேச்சுவார்தையொன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வின் போது பிரதேச வாழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கிழக்கு பிராந்திய தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ லால் பெரேரா அவரது அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
 
மேலும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாதுகாப்பு தலமையகத்தினால் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகல் போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 29, 2014

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வது தொடர்பான விசேட கூட்டம்!

Tuesday, April 29, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மீள்குடியேற்ற அமைச்சும் மூலம் இதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்டுவருகின்றார்.

இதன் கீழ் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் குடி நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பில் ஆராயும் உயர் மட்டக்கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது வவுணதீவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 100 மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றினை பெற்றுக்கொள்பவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்காக சுமார் 60 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் மீள்குடியேற்ற பகுதிகளில் நீர் தேவையுள்ள பகுதிகளில் உள்ள 200 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடி நீரைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான்- கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்தார்!

Tuesday, April 29, 2014
இலங்கை:சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸானுக்கும், கிழக்குமாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று (28.04.2014)  திங்கட்கிழமை காலை திருகோணாமலையிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
எமது நாட்டில் நடைபெறவுள்ள ஏ.எல்.எம்.றிஸான் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிஸான் முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
 
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவின் தலைமைத்துவத்தினையும், நேர்த்தியான சேவையினையும் பாராட்டி ஞாபகச் சின்னமொன்றை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் வழங்கி வைத்தார்.
 
இங்கு அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் கல்வி, உயர் கல்வி, சுயதொழில் போன்ற துறைகளின் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைத் தமிழரசுக் கட்சி பயன்படுத்த முடியாது என சங்கரி தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்!

Tuesday, April 29, 2014
இலங்கை:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தும் உரிமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியவற்றுக்கு மட்டுமே உண்டு. எனவே அந்தப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையை எமது கட்சிகளுக்கே தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும், அக்கட்சியின் அமைப்பு நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையாவும் ஒப்பமிட்டு இன்று கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.


தமிழர் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட்டு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டோம். அதற்குரிய ஆவணங்களை நான் ஏற்கனவே தங்களுக்கு கையளித்துள்ளேன்.

அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலையீட்டினால் தவறான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்க்காது, அந்த இடத்திற்கு எம்முடன் கலந்து ஆலோசிக்காமல், மோசடி மூலம் தமிழரசுக் கட்சி அதில் இணைக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட, வடக்கு கிழக்கு மக்களின் ஒரேயொரு மிகப்பெரிய ஜனநாயக கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை திட்டமிட்டு தவிர்த்துவிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம் கையில் எடுத்துக்கொண்ட சிலர், மறைந்த திரு. சு.ப. தமிழ்ச்செல்வனின் உதவியுடன், தமிழரசு கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக்கொண்டனர்.

அதுவரை தமிழரசுக் கட்சி 26 ஆண்டுகளுக்கு மேல் அக்கட்சியின் ஸ்தாபகர், அமரர் திரு. சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களாலேயே செயலிழக்க வைக்கப்பட்டிருந்தது. அன்று ஆயுத கலாச்சாரம் வலுப்பெற்றிருந்தமையால் ஜனநாயகவாதிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வன் தனக்கென ஆறு இடங்களை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஆறு இடங்களையும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு பகிர்ந்து அளித்தார். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தாங்கள்தான் பெரும்பான்மை என்று கூறவோ, முடிவுகளை எடுக்கவோ தமிழரசுக் கட்சிக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட நான்கு கட்சிகளுக்குமே அந்த தகுதியும் உரிமையும் உண்டு.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரை பலர் பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைவதிலும் குறிப்பாக நிதி சேகரிப்பிலும் கவனத்தை செலுத்துகின்றார்களே தவிர எமது மக்களின் எதிர்கால நல்வாழ்விற்காக எதுவும் செய்வதில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் என்றுமே நிலையான நிரந்தர தீர்விற்கான வழியும் கிட்டாது போய்விடும். அதுமட்டுமல்ல நாம் எதிர்பார்க்கும் இன ஒற்றுமைக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் நிலையும் உருவாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை ஒழிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உபயோகிக்கப்படுகின்றது.
எனவே தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முற்றுமுழுதாக விதிமுறைகளுக்கு அப்பால் செயற்பட்டு மக்களை தவறான வழிக்கு திசை திருப்பி தமிழ் மக்களை மீண்டும் அழிவின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் என நாம் கருதுவதால், நான் தங்களிடம் கையளித்த ஆவணங்கள் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக்கூடிய உரிமையும் தகுதியும் எமது கட்சிகளுக்கே அதிகமாக உள்ளதால் அப்பெயரை பயன்படுத்தும் உரிமையை எமது கட்சிகளுக்கே தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலர் தமது தேவைக்காக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கூடிய வகையில் அப் பெயரை பயன்படுத்தும் உரிமையும் தகுதியும் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கடசிகளுக்குமே உண்டு என்பதையும் தங்களுக்கு அறியத்தருகின்றேன். எவரையேனும் இணைத்துக் கொள்வதற்கான உரிமையோ, அல்லது நீக்குவதற்கான உரிமையோ மேற்குறிப்பிட்ட கட்சிகளுக்கே உண்டு என்பதையும் மேலும் தெரிவித்துக்கொள்கின்றேன். - என்று உள்ளது.

வடமாகாண முதலமைச்சரை இங்குள்ளவர்கள் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றனர்: வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Tuesday, April 29, 2014
இலங்கை::
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா - சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்படவேண்டும் என நான் எண்ணுகின்றேன்' என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
வடமாகாண முதலமைச்சரை இங்குள்ளவர்கள் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றனர். அவரது செயற்பாடுகளை குழப்புகின்றனர் எனக் கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண சபையில் உள்ளதை ஒழுங்காக செய்த பின்னர் தொடர்ந்து இல்லாது பற்றி கதைப்போம். அதற்கு நாங்களும் ஆதரவு தருவோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்வது, தொடர்பில் எதிர்க்கட்சியினராகிய நாங்களும் ஆதரவு தருவோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கின்ற போதும், வடமாகாண சபையில் இருந்து செல்கின்ற கடிதங்கள் ஆங்கிலத்திலேயே செல்கின்றன.
 
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் தறுதலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். அது தவறானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய நாம் தொண்டர் ஆசிரியர்களை அவர்களின் தகைமைக்கேற்பவே நியமித்தோம்' எனவும் தெரிவித்தார். இதன்போது, குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஏன் அதனை தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் என்று சொல்கின்றீர்கள்? ஏனைய ஆசிரியர்கள் நியமனங்களிலும் அவ்வாறான நியமனங்கள் அமையப்பெற்றன எனச் சுட்டிக் காட்டினார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு தடை கோரிய மனு தள்ளுபடி கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!

Tuesday, April 29, 2014
பெங்களூர்::ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி 2 கம்பெனிகள் தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுதமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மெடோ அக்ரோ பாரம், நெக்ஸ்ட் பிரபார்ட்டி ஆகிய 2 கம்பெனிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
 
வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ஏற்கனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியாயின. அதை எதிர்த்து கம்பெனிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று, நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கம்பெனிகள் சார்பில் வக்கீல் ஜெய்குமார் பாட்டீல் வாதாடினார். அவர் கூறியதாவது:வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு இந்த கம்பெனிகளில் எந்த நேரடி தொடர்பும் கிடையாது. எங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாக 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
 
அதுபோல் ஜெயலலிதாவும், சசிகலாவும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே தவிர நேரடி பங்குதாரர்களாக இல்லை. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எங்கள் கம்பெனிகளின் சொத்துக்களை ஜெயலலிதாவின் சொத்துகளாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, வழக்கில் இருந்து எங்கள் கம்பெனிகளை விடுவிக்க வேண்டும். எங்கள் மனு மீதான விசாரணை முடியும் வரை சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு வக்கீல் பவானிசிங் ஆஜராகி, ‘வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக்கூடாது’ என்றார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏற்கத்தக்கதல்ல’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நேற்று விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

7வது கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் சோனியா, மோடி தொகுதிகளில் நாளை வாக்குபதிவு தொண்டர்கள் வீடு, வீடாக ஓட்டுவேட்டை !

Tuesday, April 29, 2014
புதுடெல்லி::நாடாளுமன்ற தேர்தலில் 7வது கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வதோதரா, காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தொண்டர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டையாடி  வருகின்றனர்.    மக்களவையில் மொத்தம் உள்ள 543 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7ம் தேதி  முதல் கட்ட தேர்தல் நடந்தது. 6வது கட்டமாக, தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 117 மக்களவை தொகுதிகளில் கடந்த 24ம் தேதி தேர்தல்  நடந்தது. இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 7வது கட்டமாக நாளை 7 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. ஆந்திராவில் 17தொகுதிகள், குஜராத்தில் 26,  பஞ்சாபில் 13, உத்தரபிரதேசத்தில் 14, மேற்குவங்கத்தில் 9, பீகாரில் 7, காஷ்மீரில் 1 ஆகிய 7 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நாகர் ஹவேலி,  டாமன் மற்றும் டையூ ஆகிய தொகுதிகளில் தலா 1 தொகுதிகளிலும் இந்த தேர்தல் நடக்கிறது. ஆந்திராவில் தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை  தொகுதிகளுடன், 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் மொத்தம் 1295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 222 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள்.  அவர்களில் 139 பேர் கடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வேட்பாளர்களில் 341 பேர் கோடீஸ்வரர்கள்.  மோடி,  சோனியா: குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன்படி, குஜராத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் வதோதரா  தொகுதியிலும் வாக்குபதிவு நடக்கிறது. அதே போல், உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

இந்த 2 தொகுதிகளிலும் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். மேலும், இத்தொகுதிகளில் மத்திய படையினர் மற்றும் உள்ளூர்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா(ஸ்ரீநகர் தொகுதி), பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங்(லக்னோ),   அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் அருண் ஜெட்லி(அமிர்தசரஸ்), முரளி மனோகர் ஜோஷி(கான்பூர்),  உமா பாரதி(ஜான்சி) ஆகியோர் போட்டியிடும்  தொகுதிகளிலும் நாளை வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு  வாக்குபதிவு தொடங்குகிறது.

விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது: வசந்த பண்டார!

Tuesday, April 29, 2014
இலங்கை::
வட மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கினால் அது நாட்டின் பிரிவினைவாதத்திற்கே உந்துசக்தியாக அமையும். எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்  தெரிவித்தது.

இதுதொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்இ இன்று நேற்றல்ல. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார என்றுமே இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போனவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது மைத்துனர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவி வகிப்பதால் வடமாகாண சபைக்கு அனைத்து அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் அதனை மறுப்பது தவறென்றும் சிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் சிக்கியிருப்பதாகவும் அமைச்சர் விமர்சிப்பதாக தெரிவித்தார்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதற்கு நாட்டு மக்கள் மத்தியில் விருப்பம் கிடையாது. இதனை மீறி செயற்பட முடியாது. அத்தோடு அதிகாரங்களை வழங்கினால் அது பிரிவினையை நோக்கியே முன்னகர்த்தப்படும். இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். நாம் அடிப்படைவாதிகள் அல்ல. தேசத்தை நேசிப்பவர்கள் என்பதை அமைச்சர் வாசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சராக பதவி வகித்துக்கொண்டு   இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதால் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமல்லாது புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமளிப்பதாக அமையும். அரச உயர்மட்டம் இது தொடர்பில் கவனம்  செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது: புலிகளின் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்

Tuesday, April 29, 2014
இலங்கை::எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் வைத்தே அவர் நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

யுத்தக்காலத்தின் போது வடமாகாண சபை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு பதிலாக இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் வரை காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் கந்தசாமி கமலேந்திரனை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி குற்றவாளியாக இனங்கண்டு கட்சியிலிருந்து நீக்கியமை எனக்கு கவலையளிக்கின்றது என்றார்.

புதிய எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்பதில் மகழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்து வரும் செயற்பாடுகள் பயன்மிகுந்ததாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

வவுனியா வைத்தியசாலையில் தப்பிச் சென்று: பெண் வேடத்தில் மறைந்திருந்த புலிகள் இயக்க சந்தேகநபர் கைது!!

Tuesday, April 29, 2014
இலங்கை::வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாஇ குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்ற இந்த சந்தேகநபர், வவுனியா, குட்ஷெட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்க புலனாய்வுத் தகவலை அடுத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இம்மாதம் முதலாம் திகதி, அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணியளவில், இவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பஹ்ரேன் ராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு பஹ்ரேனில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது!

Tuesday, April 29, 2014
இலங்கை::இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பஹ்ரேன் ராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பஹ்ரேன் அரசாங்கத்தால் 'க(ப)லிபாஃ அபிதானய' எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரேன் ராச்சியத்தின் ஹமாத் பின் இசா அல் கலிபா மன்னரால் இந்த விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கிவைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியான தங்களும், உங்களைச் சார்ந்த நட்பு நாடுகளும், இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தளத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம்' என்று பஹ்ரேன் மன்னர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எலிசபேத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கௌரவ விருதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'தாம் பெருமிதத்தையும், வரபிரசாத்தை எதிர்கொண்ட மகிழ்ச்சியையும் அடைவதாக தெரிவித்தார்.
 
பஹ்ரேன் ராச்சியத்துடன், மிகவும் விரிவான கூட்டுறவை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.